நிலாரசிகன், சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி. இது வரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. வேட்கையின் நிறங்கள்,யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் சிறுகதைகள் இணைய இதழ்களில் வெளியானபோது பெரும் சலசலப்பையும் பரவலான விவாதங்களையும் உருவாக்கின. அகம் சார்ந்த உணர்வுப்போராட்டங்களை,தொலைத்துவிட்ட கிராம வாழ்வின் பரிவை,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை,சக மனிதர்களின் நம்பிக்கையின்மையை,எதிர்பார்ப்புகளற்ற அன்பை இயல்பாக வாசிப்பவரின் மனதோடு ஒன்றிவிடச்செய்யும் நெருடலற்ற மொழியால் தனித்து நிற்கின்றன இவரது கதைகள்.
Pages: 88
Rs.70.00
| Current Reviews: 3 |
 |
| This product was added to our catalog on Saturday 26 December, 2009. |
|